search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நவ்ஜோத் சிங் சித்து"

    • சாலையில் காரை நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் குர்ணாம்சிங் என்பவரை நவ்ஜோத்சிங் சித்து தாக்கினார்.
    • கடந்த ஆண்டு மே மாதம் சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கியது.

    பாட்டியாலா:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் கடந்த 1988-ம் ஆண்டு கொலை வழக்கில் சிக்கினார்.

    சாலையில் காரை நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் குர்ணாம்சிங் என்பவரை நவ்ஜோத்சிங் சித்து தாக்கினார். படுகாயம் அடைந்த குர்ணாம்சிங் உயிரிழந்தார். இந்த வழக்கில் நவ்ஜோத்சிங் சித்துக்கு பஞ்சாப் ஐகோர்ட்டு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சித்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.

    பல ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கியது. இதில் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து உத்தர விட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்ட பாட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதற்கிடையே தண்டனை காலம் வருகிற மே 16-ந் தேதி வரை உள்ள நிலையில் நன்னடத்தை காரணமாக முன்கூட்டியே நவ்ஜோத்சிங் சிறையில் இருந்து விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    • கடந்த ஆண்டு மே 20-ந் தேதி, பாட்டியாலாவில் உள்ள கோர்ட்டில் சரண் அடைந்தார்.
    • இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் நவ்ஜோத்சிங் சித்து, காங்கிரசில் பணியாற்றி வருகிறார்.

    சண்டிகார்:

    இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் நவ்ஜோத்சிங் சித்து, காங்கிரசில் பணியாற்றி வருகிறார்.

    அவர் 1988-ம் ஆண்டு சாலையில் ஏற்பட்ட தகராறில் 65 வயது முதியவரை தாக்கியதில், முதியவர் உயிரிழந்தார். இதன் மேல்முறையீட்டு வழக்கில், சித்துவுக்கு சுப்ரீம் கோர்ட்டு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்தது.

    அதைத்தொடர்ந்து, அவர் கடந்த ஆண்டு மே 20-ந் தேதி, பாட்டியாலாவில் உள்ள கோர்ட்டில் சரண் அடைந்தார். பிறகு, பாட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டார்.

    சிறையில் நன்னடத்தையுடன் செயல்படுபவர்களுக்கு தண்டனை குறைப்பு அளிக்க பஞ்சாப் சிறைத்துறை விதிமுறை வகை செய்கிறது. அதன்படி, சித்து தண்டனை குறைப்பு பெற்று இன்று (சனிக்கிழமை) பாட்டியாலா சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று அவருடைய வக்கீல் வர்மா தெரிவித்தார்.

    பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில், தற்போது அதை திரும்ப பெற்றுவிட்டேன் என சித்து தெரிவித்துள்ளார்.
    பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. கேப்டன் அமரீந்தர் சிங் முதலமைச்சராக இருந்து வந்தார். அவருக்கு எதிராக எம்.எல்.ஏ.-க்கள் செயல்பட்டு, முதல்வரை மாற்ற வேண்டும் என டெல்லி மேலிடத்திற்கு வேண்டுகோள் விடுத்தனர்.

    மேலும், பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்து வந்த நவ்ஜோத் சிங் சித்துவுக்கும், கேப்டன் அமரீந்தர் சிங்கிற்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

    இதனால் அமரீந்தர் சிங் கடந்த செப்டம்பர் மாதம் 18-ந்தேதி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் சரண்ஜித் சிங் சன்னி புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

    இதற்கிடையே செப்டம்பர் 28-ந்தேதி திடீரென நவ்ஜோத் சிங் சித்து, தான் வகித்து வந்த பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதோடு டெல்லி சென்று உயர்மட்ட தலைவர்களை சந்தித்து பேசினார். அவர் ராஜினாமா முடிவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால் சித்து எந்த முடிவும் எடுக்காமல் இருந்தார்.

    சமரசம் மூலம் மனிதனுடைய குணத்தில் சரிவு ஏற்படுகிறது. பஞ்சாப் மாநிலத்தின் எதிர்காலம் மற்றும் பஞ்சாப் நலத்திட்டத்தின் குறிக்கோளில் ஒருபோதும் சமரசம் செய்ய முடியாது என்று தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் இன்று சண்டிகரில் நிருபர்களை சந்தித்தார். அப்போது காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த முடிவை திரும்ப பெற்றுவிட்டேன் எனத் தெரிவித்துள்ளார். மேலும், ‘‘புதிய அட்டர்னி ஜெனரல் நியமிக்கப்படும்போது, நான் பதவி ஏற்றுக்கொள்வேன். என்னுடைய ராஜினாமா தனிப்பட்ட ஈகோ கிடையாது. அது ஒவ்வொரு பஞ்சாப் மக்களின் நலனைச் சார்ந்தது’’ என்றார்.
    ×